சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் தீவிபத்து – பத்து மணிநேரமாக எரிகிறது!

0
489


சென்னை திநகரில் உள்ள தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் தீவிபத்து ஏற்பட்டதை தொடர்ந்து 10 மணி நேரமாகியும் தீயை அணைக்க முடியாததால் முதல் தளத்தில் உள்ள சுவர்களை இடிக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தி சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் இன்று அதிகாலை தீவிபத்து ஏற்பட்டது. மின் கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்பட்ட இக்கடையில் இருந்து 15-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் உயிருடன் மீட்கப்பட்டனர். தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடம் விரைந்து தீயை அணைக்க 10 மணிநேரமாக போராடி வருகின்றனர். 15 தீயணைப்பு வாகனங்கள் வரழைக்கப்பட்டுள்ளன. இத்தனை நேரம் தீ எங்கு பிடித்துள்ளது என்று கண்டறிய முடியாததால் தீயை அணைக்க வீரர்கள் திணறினர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, தி.நகரில் அனுமதி பெறாமல் பல கட்டிடங்கள் அதிக மாடிகளைக் கட்டியுள்ளார்கள் என புகார் எழுந்தது. அதையடுத்து அந்த கட்டிடங்கள் மூடப்பட்டிருந்தன. ஆனால் திரும்பவும் அவை எந்த மாற்றமும் செய்யாமல் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here