ஆப்கானிஸ்தான் – காபூலில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 80 பேர் பலி 320 பேர் காயம் !

0
466


ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளிநாட்டு தூதர்கள் தங்கியுள்ள குடியிருப்பு பகுதியில் குண்டு நிரப்பிய வாகனதில் வந்த குண்டுதாரி பாது காப்பு கடவைக்கு அண்மையில் குண்டை வெடிக்க வைத்ததில் 80 பேர் பலியானதுடன் 320 பேர் காயம் அடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன .
குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ள பகுதியிலேயே, ஜேர்மனியின் தூதுவராலயம் அமைந்திருக்கிறது . இன்று காலை 8.25 மணியளவில் தாக்குதல் இடம்பெற்ற பின்பு தலைநகர் ஒரே கரும் புகை மண்டலமாக கணப் படுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன .
அண்மைக்காலமாக ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மற்றும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தீவிரவாதிகள் கார் குண்டு மூலம் தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here