சிரியாவில் ரஷ்ய விமானப்படை நடாத்திய தாக்குதலில்10 பேர் பலி!

0
535

சிரியாவில் ரஷ்ய விமானப்படை நடாத்திய தாக்குதலில்10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவின் இட்லிப் மாகாணம், ஆரிஹா பகுதியில் ரஷ்ய விமானப்படையினரால் நேற்று இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சிரியாவில் தற்போது உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிற நிலையில் .

ரஷ்ய ராணுவ உதவியுடன் சிரியாவின் பெரும்பாலான பகுதியினை அந்த நாட்டு ஜனாதிபதி பஷர் அல்-அசாத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளார்.

கிளர்ச்சிப் படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளைக் கைப்பற்றுவதற்கு ரஷ்ய விமானப் படை தொடர்ந்து தாக்குதல்களை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here