மீன­வர்­களை விடு­தலை செய்­யு­மாறு கோரி இரா­மேஸ்­வரம் மீன­வர்கள் ஆர்ப்­பாட்­டம்!

0
164

Sequence-03_Still002இலங்­கையில் கைது செய்­யப்­பட்ட மீன­வர்­களை விடு­தலை செய்­யு­மாறு கோரி இரா­மேஸ்­வரம் மீன­வர்கள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

இலங்கை கடற்­ப­ரப்பில் எல்லை கடந்து மீன்­பி­டியில் ஈடு­பட்­டி­ருந்த, தமி­ழக மீன­வர்கள் 54 பேரை கடற்­ப­டை­யினர் நேற்று முன்­தினம் கைது செய்­துள்­ளனர். வடக்கு தலை­மன்னார் மற்றும் நெடுந்­தீவு ஆகிய கடற்­ப­கு­தி­களில் மீன்­பி­டியில் ஈடு­பட்­டி­ருந்த தமி­ழக மீன­வர்­களே இவ்­வாறு கைது செய்­யப்­பட்­டுள்­ள­தாக பதில் இரா­ணுவ பேச்­சாளர் பிரி­கே­டியர் ஜயனாத் ஜய­வீர குறிப்­பிடுகையில்; அவர்கள் பயன்­ப­டுத்­திய 10 பட­கு­களும் கைப்­பற்­றப்­பட்­டுள்­ள­தா­கவும் குறிப்பிட்­டி­ருந்தார். இவர்கள் எதிர்­வரும் 27ஆம் திக­தி­வரை விளக்­க­ம­றி­யலில் வைப்­ப­தற்கு மன்னார் நீதிவான் நிதி­மன்றம் உத்­த­விட்­டுள்­ளது.

இந்­நி­லையில் இக்­கை­துக்கு எதிர்ப்பு தெரி­வித்து நேற்­றைய தினம் இரா­மேஸ்­வரம் மீன­வர்கள் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடுபட்­டனர். அதே­நேரம் கைது செய்­யப்­பட்ட மீன­வர்­களை விடு­தலை செய்யும் வரையில் தொடர்ந்தும் ஆர்ப்­பாட்­டத்தை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக இந்­திய – இலங்கை மீனவர் கூட்­ட­மைப்பின் தலைவர் என். தேவதாஸ் தெரி­வித்தார்.

இதே­வேளை, தமி­ழக மீன­வர்கள் இலங்கை கடற்­ப­டையால் கைது­செய்­யப்­பட்­டி­ருப்­பது கண்­டிக்­கத்­தக்­கது என பார­தீய ஜனதா கட்­சியின் மாநில தலைவர் தமி­ழிசை சவுந்­தர்­ராஜன் தெரி­வித்­துள்ளார்.

இந்­திய பிர­த­மரும் வெளியு­றவுத் துறை அமைச்­சரும் மீனவர் பிரச்­சி­னைக்கு நிரந்­தர தீர்­வு­காண முயற்­சித்­து­வரும் நிலையில் இலங்கை அரசின் இந்த கைது நட­வ­டிக்கை கண்­டிக்­கத்­தக்­கது என அவர் கூறியுள்ளார்.

அதேநேரம் இலங்கை இந்திய மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக நாளைய தினம் சென்னையில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள் ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here