
மூத்த தமிழ்த்தேசியவாதியும் எழுகதிர் இதழின் ஆசிரியருமான பெருமதிப்பிற்குரிய ஐயா அருகோ (அரு கோபாலன்) அவர்கள் இன்று 23.12.2025 செவ்வாய்க்கிழமை காலை உடல்நலக்குறைவால் தாய்த் தமிழகத்தில் சாவடைந்துள்ளார்.
அவருக்கு தமிழ்த் தேசியத்தோடு பயணிக்கும் அனைவரும் தமது கண்ணீர் வணக்கத்தைப் பகிர்ந்து வருகின்றனர்.

எழுகதிர் ஆசிரியர்
தமிழ் இன உரிமைப் போராளி ஐயா அருகோ மறைவு..குறித்து ஓவியர் புகழேந்தி அவர்கள் தெரிவிக்கையில்,
பல்வேறு தமிழ் இன சமூகப் போராட்டம் ஆர்ப்பாட்டங்களில் இணைந்து செயற்பட்டிருக்கிறோம்.
அவர் மறைவிற்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்று தனது இரங்கலைப் பதிவிட்டுள்ளார்.




