
தமிழக முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் இல்லத்தில் நேற்று (18) இரவு 10.15 மணியளவில் இடம்பெற்றது.
40 நிமிட நேரம் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது ஏக்கிய இராச்சிய அரசியல் யாப்பு நிராகரிப்பு, தமிழர் தேசம் இறைமை, சுயநிர்ணய உரிமை, அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி யாப்பு உருவாக்கப்படல் வேண்டும், ஈழத்தமிழ் கடற்தொழிலாளர் பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும் ஆகிய விடயங்கள் தொடர்பில் முக்கியமாக பேசப்பட்டன.
இதன்போது தமிழக முதலமைச்சருடன் பேசப்பட்ட விடயங்களும் எழுத்து மூலம் கையளிக்கப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன், தமிழ்த் தேசியப் பேரவை சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொ.ஐங்கரநேசன் (தலைவர் தமிழ்த் தேசிய பசுமை இயக்கம்), செ.கஜேந்திரன் (செயலாளர் த.தே.ம.மு), த.சுரேஸ் (தேசிய அமைப்பாளர்), க.சுகாஷ் (சிரேஸ்ட சட்டத்தரணி), ந.காண்டீபன் (சிரேஸ்ட சட்டத்தரணி) ஆகியோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது


