
ஈரான் உடனான 21 மணி நேர பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் பேட்டி அளித்துள்ளார். அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் விடிய விடிய நடைபெற்றது. அமெரிக்காவின் அம்சங்களை ஈரான் ஏற்கவில்லை. இரு நாடுகள் இடையே எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகமலேயே அமெரிக்கா திரும்புகிறோம்
பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் அமெரிக்கா-ஈரான் இடையேயான நேரடி இருதரப்பு பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் நேற்று நடந்தது. இதில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முன்னிலையில் இரு நாடுகளின் முக்கிய தலைவர்கள் அடங்கிய பிரதிநிதிகள் குழு இருதரப்பு அமைதி ஒப்பந்தத்திற்கான ஆலோசனை நடத்தியது. 47 ஆண்டுகால வரலாற்றில் அமெரிக்கா-ஈரான் இடையே நடந்த முதல் நேரடி பேச்சுவார்த்தை இது என்பதால் சர்வதேச அளவில் மிகவும் கவனம் பெற்றுள்ளது.


