உள்ளூர் மீனவர்களின் வாடி அமைப்புக்காக வழங்கப்பட்ட பிரதேசம் தென்னிலங்கை மீனவர்களின் கரைவலைப்பாட்டுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிக்குள் அடங்கவில்லை எனப் பிரதேச செய லாளரினால் அரச நில அளவையாளரின் அளவீட்டு ஆவணம் ஊடாக முல்லைத்தீவு நீதிமன்றின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாய் கடற்கரையில் உள்ளூர் மீனவர்களின் பயன்பாட்டுக் காகப் பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்ட நிலம் தென்னிலங்கை மீனவர்க ளுக்கான கரை வலைப்பாட்டுப் பகுதிக்குள் அடங்குவதால் குறித்த வாடியைத் தடை செய்யவேண்டும் எனக் கோரி 3 தென்னிலங்கை மீனவர்களின் சார்பில் நீரியல் வளத் திணைக்களம் கடந்த ஆண்டு முல் லைத்தீவு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தது.
மேற்படி வழக்கு நேற்றைய தினம் முல்லைத்தீவு மாவட்ட தீதிமன்றில் நீதிவான் சம்சுதீன் முன் னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது உள்ளூர் மீனவர் அமைப்புக்களின் சார்பில் சட்டத்தரணிகளான அன்ரன் புனிதராஜ் , பரஞ்சோதி, ரனேஸ்வரன், ராதிகா உள்ளிட்டோர் முன்னிலையானார்கள்.
குறித்த வழக்குத் தொடர்பில் சட்டத்தரணி அன்ரன் புனிதராஜ் தெரிவிக்கையில், தென்னிலங்கை மீனவர்களின் கரைவலை மீன்பிடிக்கு அனுமதிக்கப்பட்ட பகுதியே தற்போது உள்ளூர் மீனவ அமைப்புக்கு வாடி அமைப்பதற்காக வழங்கப்பட்டுள்ளதாக நீரியல் வளத் திணைக்களத்தினால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
இதன் பிரகாரம் கடந்த நவம்பர் மாதம் 15ஆம் திகதி இடம்பெற்ற வழக்கின்போது மன்றில் தோன்றிய நீரியல் வளத் திணைக்களத்தின் பிரதிநிதி, இந்தப் பிரதேசங்கள் ஜீ.பி.எஸ் தொழில்நுட் பம் மூலம் அளவீடு செய்யப்பட்டுள்ளபோதிலும் யாருடைய பகுதியில் அமைந்துள்ளது என உறுதியாகச் சொல்ல முடியவில்லை எனத் தெரிவித்திருந்தார். அவர் அவ்வாறு தெரிவித்தது மட் டுமன்றி எந்தவிதமான ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வில்லை.
இருப்பினும் குறித்த வாடி தென்னிலங்கை மீனவர்களின் பகுதியில் அடங்கவில்லை என்பதை அன்றும் மன்றின் கவனத்துக்குக் கொண்டு வந்திருந்தோம். இதன் அடிப்படையில் இந்த வழக்கு நேற்றைய தினத்துக்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. நேற்று திணைக்களம் சார்பில் மாவட்டப் பிரதிநிதியுடன் கொழும்புத் தலைமையக நீரியல் வளத் திணைக்கள அதிகாரியும் மன்றில் தோன்றி னர். குறித்த வாடியானது தென்னிலங்கை மீனவர்களின் பிரதேசத்துக்குள் தான் அடங்குவதாக அவர்கள் மன்றில் தெரிவித்தனர்.
இருப்பினும் வாடி அமைந்துள்ள பகுதி தென்னிலங்கை மீனவர்களுக்கு வழங்கப்பட்ட பகுதி யில் இருந்து 325 மீற்றருக்கும் அப்பாலேயே உள்ளது எனப் பிரதேச செயலாளரினால், அரச நில அளவையாளர் மேற்கொண்ட அளவீட்டு ஆவணத்தின் மூலம் மன்றில் நிரூபிக்கப்பட்டுள்ள தோடு அந்த அளவீட்டுப் பத்திரமும் சமர்ப்பிக்கப்பட்டது.
அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்ட ஆவ ணத்தை மாகாண நில அளவைத் திணைக்களப் பிரதிநிதி உறுதி செய்திருந்தார். இவற்றை ஆராய்ந்த நீதிவான், நில அளவை அதிகாரியின் அறிக்கையின் பிரகாரம் தெற்கு மீனவருக்கு ஒதுக்கப்பட்ட பிரதேசத்துக்கும் தற்போது பிரதேச செயலாளரினால் வழங்கப்பட்ட இடத்துக்கும் இடையில் 325 மீற்றர் இடைவெளி உள்ளது. அதனால் கரைவலைப் பாட்டுக்குத் தடை ஏற்படும் எனக் கூறமுடியாதே எனத் திணைக்கள அதிகாரிகளிடம் கூறினார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அதிகாரிகள், நில அளவைப் பத்திரம் தொடர்பில் இதுவரை தெரியாதமையால் அது தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிப்பதாகத் தெரிவித்தனர். அதனை அடுத்த தவனையில் சமர்ப்பிக்கு மாறும் அதன் பிரகாரம் தீர்வை எட்டமுடியும் என வும் தெரிவித்த நீதிவான் வழக்கை ஏப்ரல் மாதம் 3ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்-.