யாழில் விபத்துக்குள்ளான பக்தர்கள் படகு: இருவர் உயிரிழப்பு!

0
16

யாழ்.குருநகர் இறங்குதுறையிலிருந்து பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயம் நோக்கிப் பெருநாளில் பங்கேற்பதற்காகச் சென்ற பக்தர்களின் படகொன்று புறப்பட்டுச் சில நிமிடங்களிலேயே இன்று வெள்ளிக்கிழமை (06.03.2026) விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்துச் சம்பவத்தில் நீரில் மூழ்கிய நிலையில் பலரும் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தில் இதுவரை உயிரிழந்த நிலையில் இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். இருவர் காணாமற் போயுள்ளதாகவும் தெரியவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here