வென்னப்புவ கடலில் மூழ்கி சகோதரர் இருவர் உட்பட இளைஞர்கள் நால்வர் பலி!

0
19

வென்னப்புவ பகுதியில் உள்ள கடலில் நீராட சென்ற இளைஞர்கள் நால்வர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை (13) இடம் பெற்றதாக வென்னப்புவ காவல்துறையினர் தெரிவித்தனர்.

இளைஞர்கள் நால்வரும் ஒன்றாக இணைந்து கடலில் நீராடிக் கொண்டிருந்த போது கடலலையில் அள்ளுண்டு சென்றுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து வென்னப்புவ காவல்துறையினர், கடற்படையினரின் உதவியோடு நால்வரையும் சடலங்களாக மீட்டுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்தனர்.

சடலங்களாக மீட்கப்பட்ட மூவர் பொகவந்தலாவ சென் விஜயன்ஸ் தோட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றைய நபர் கொழும்புப் பகுதியைச் சேர்ந்தவர்.

உதயகுமார் ஸ்ரீதரன் (வயது 17), ஸ்ரீகாந்த் சரண்ராஜ் (வயது 19), ஸ்ரீகாந்த் அஜித் குமார் (வயது 18) மற்றும் யூசுப் (வயது 27) ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஸ்ரீகாந்த் சரண்ராஜ் மற்றும் ஸ்ரீகாந்த் அஜித்குமார் ஆகிய இருவரும் ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் எனவும் உதயகுமார் ஸ்ரீதரன் உறவினர் எனவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

நான்கு சடலங்களும் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வென்னப்புவ வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வென்னப்புவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

(நன்றி: இணையம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here