“ஒபரேஷன் சிந்தூர்” (Operation Sindoor) – இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல்!

0
10

பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவின் மூன்று பாதுகாப்புப் படைகளான இராணுவம், கடற்படை மற்றும் வான்படை இணைந்து “ஒபரேஷன் சிந்தூர்” என்ற குறியீட்டுப் பெயரில் புதன்கிழமை காலை 1.44 மணிக்கு பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு எதிராக மிகச்சரியான வழியில் ஏவுகணை தாக்குதலை நடத்தியது.

இந்த தாக்குதலின் முக்கிய அம்சங்கள்:

இந்த தாக்குதல் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 உயிர்கள் பலியாகியதற்கு பதிலளிக்க மேற்கொள்ளப்பட்டது.

ஜெய்ஷ்-இ-முகமது தலைமையகம் (பஹாவல்பூர்) மற்றும் லஷ்கர்-எ-தொய்பா தலைமையகம் (முரிட்கே) ஆகியவை உட்பட 9 பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன.

இந்திய இராணுவம் தெரிவித்தது போல, “பாகிஸ்தான் இராணுவ ஆதாரங்கள் எதுவும் குறிவைக்கப்படவில்லை. தாக்குதல் மிகவும் கட்டுப்பாடுடன் மேற்கொள்ளப்பட்டது.”

மூன்று படைகளும் காமிகேஸ் ட்ரோன்கள் பயன்படுத்தி குறிவைத்து தாக்கியதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்த நடவடிக்கையை பிரதமர் நரேந்திர மோடி நேரில் கண்காணித்து வந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலுக்குப் பிறகு, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவுடன் தொடர்பு கொண்டு, நடவடிக்கையின் விவரங்களை பகிர்ந்துள்ளார்.

இந்த நடவடிக்கையைப் பற்றிய முழுமையான விளக்கம் இராணுவத்தால் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here