மயிலிட்டியில் சிறீலங்கா படைகளின் ஆக்கிரமிப்பில் இருந்த 683 ஏக்கர் காணி விடுவிப்பு. நிபந்தனையுடன் வீதி விடுவிப்பு !

0
262

வலிகாமம் வடக்குப் பகுதியில் சிறீலங்கா படைகளால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்த மக்கள் காணியில் 683 ஏக்கர் காணி இன்று (13) விடுவிக்கப்பட்டுள்ளது.
மயிலிட்டி அம்மன் கோவிலுக்கு அருகாமையிலுள்ள மைதானத்தில் இக் காணி கையளிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
கடந்த 28 வருடங்களாக மக்கள் பாவனைக்கு விடப்படாத வீதியான காங்கேசன்துறை – வளலாய் வரையிலான வீதியும் நிபந்தனையுடன் விடுவிப்புச் செய்யப்பட்டுள்ளது .
இந்த வீதி காலை 6.00 மணிமுதல் மாலை 7.00 மணி வரை மட்டுமே மக்கள் பாவைனைக்கு விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here