தமிழரசுக் கட்சி தலைவரானார் சிறிதரன்!

0
177

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தெரிவு செய்யப்பட்டுள்ளார். திருகோணமலை நகரமண்டபத்தில் இன்று காலை இடம் பெற்ற கூட்டத்தில் 327 பொதுக்குழு உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொண்டனர்.

இதில், பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் 184 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். எம்.ஏ.சுமந்திரன் 137 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். சி.யோகேஸ்வரன் போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here