இன்று ஓகஸ்ட் 14- தமிழ் மக்களால் மறக்க முடியாத செஞ்சோலைப் படுகொலை நினைவு நாள்!

0
101

20 ஆண்டுகள் கடந்தாலும் எங்கள் கண்மணிகளை எண்ணி நெக்குருகும் நினைவில் நினைந்து உருகுகிறோம்!

ஓகஸ்ட் 14, 2006 அன்று முல்லைத்தீவு வள்ளிபுனம் செஞ்சோலைச் சிறுவர் இல்லத்தின் வளாகத்தில் சிறிலங்கா வான் படை குறிவைத்துக் குண்டு வீசி எம் அன்புச் செல்வங்களைப் படுகொலை செய்து எம் நெஞ்சங்களில் நெருப்பேற்றியது!

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் உள்ள வள்ளிபுனம் பகுதியில் அமைந்துள்ள செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தில் ஓகஸ்ட் 10, 2006 முதல் நடைபெற்ற பாடசாலை மாணவர்களுக்கான அனர்த்த முகாமைத்துவ முதலுதவிப் பயிற்சி நெறியில் வன்னிப் பிரதேச கிளிநொச்சி, முல்லைத்தீவு கல்வி வலயங்களைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கான உயர் தர வகுப்பு மாணவிகள் பங்குபற்றியிருந்தனர்.

இவ்வாளுமைப் பட்டறைப் பயிற்சி நெறியில் இம்மாணவிகள் பங்குபற்றிப் பயின்று கொண்டிருந்த நாட்களில் இலங்கை வான்படைக்குச் சொந்தமான நான்கு கிபிர் விமானங்கள் செஞ்சோலை வளாகத்தில் ஓகஸ்ட் 14, 2006 அன்று காலை 7:30 மணியளவில் காலைக் கடன்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மாணவிகள் மீது கண்மூடித்தனமான குண்டுத்தாக்குதலினை மேற்கொண்டன.

இக் குண்டுத் தாக்குதலில் 52 மாணவிகள் மற்றும் இரு பணியாளர்கள் உட்பட 54பேர் உயிரிழந்தனர்.

130 மாணவிகள் படுகாயமடைந்ததுடன் பல மாணவிகள் சிறு காயங்களிற்கும் உள்ளாகினர்.

படுகாயமடைந்தவர்களில் மூன்று மாணவியர்களுக்குக் கால்கள் துண்டிக்கப்பட்டதுடன் மாணவி ஒருவர் கண் ஒன்றை இழந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

செஞ்சோலை வளாகப் குண்டுவீச்சில் உயிரிழந்த மாணவிகளின் விபரம்:

  1. முத்தையா இந்திரா
  2. முருகையா அருட்செல்வி
  3. சிவமூர்த்தி கார்த்திகா
  4. சந்தனம் சத்தியகலா
  5. கனகலிங்கம் நிருபா
  6. கனகலிங்கம் நிருஷா
  7. நவரட்ணம் சாந்தகுமாரி
  8. நாகலிங்கம் கோகிலா
  9. சண்முகராசா கவேந்தினி
  10. பாலகிருஸ்ணன் மதினி
  11. சிவமயஜெயம் கோகிலா
  12. விவேகானந்தம் தட்சாயினி
  13. சாந்தகுமார் சுகிர்தா
  14. உதயகுமாரன் கௌசிகா
  15. நல்லபிள்ளை நிந்துஜா
  16. வீரசிங்கம் றாஜிதா
  17. தம்பிராசா லக்சியா
  18. மகாலிங்கம் வென்சிடியூலா
  19. துரைசிங்கம் துதர்சினி
  20. குபேந்திரச்செல்வம் லிகிதா
  21. வரதராஜா மங்களேஸ்வரி
  22. இராசேந்திரச்செல்வம் மகிழ்வதனி
  23. நீலாயினார் நிவாகினி
  24. தமிழ்வாசன் நிவேதிகா
  25. சுந்தரம் அனோஜா
  26. புவனசேகரம் புவனேஸ்வரி
  27. தேவராசா சர்மினி
  28. சிவானந்தராசா திவ்வியா
  29. தம்பிமுத்து தயாழினி
  30. தம்பிராசா சுகந்தினி
  31. சிவசுப்பிரமணியம் வட்சலாமேரி
  32. தனபாலசிங்கம் பகீறஜி
  33. தணிகாசலம் தனுசா
  34. பத்மநாதன் கலைப்பிரியா
  35. மார்க்குப்பிள்ளை கெலன் சுதாயினி
  36. இராசமோகன் கம்சனா
  37. மகாலிங்கம் வசந்தராணி
  38. கிரிதரன் டயானி
    39.துரைசிங்கம் திசானி
  39. வைரமுத்து கிருத்திகா
  40. சந்திரமோகன் நிவேதிகா
  41. நாகலிங்கம் தீபா
  42. தம்பிராசா தீபா
  43. திருநாவுக்கரசு நிரஞ்சுலா
  44. இரவீந்திரராசா றம்ஜா
  45. கணபதிப்பிள்ளை நந்தினி
  46. விஜயபவன் சிந்துகா
  47. நகுலேஸ்வரன் நிஷாந்தினி
  48. தர்மகுலசிங்கம் கேமாலா
  49. அருளம்பலம் யசோதினி
  50. செல்வம் நிறோஜினி

உயிரிழந்த செஞ்சோலை பணியாளர்களர்கள்

  1. சந்திரசேகரன் விஜயகுமாரி
  2. சொலமொன் சிங்கராசா

வழமைபோல தமிழரின் படுகொலைகளிற்கு இந்த கோர நிகழ்விலும் நீதி கிடைக்கவில்லை!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here