
தமிழ்த்தேசியபேரவையின் ஏற்பாட்டில், செஞ்சோலை இனப்படுகொலையின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பு YMCA மண்டபத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு, படுகொலை செய்யப்பட்ட எம் பிஞ்சு உறவுகளுக்கு மலர் அஞ்சலி செலுத்தி, அவர்களின் நினைவுகளை நெஞ்சில் சுமந்து நினைவேந்தினர்.
20 ஆண்டுகள் கடந்தாலும், செஞ்சோலையில் பறிக்கப்பட்ட அந்த பிஞ்சு உயிர்களின் நினைவுகள் எம் மனங்களில் என்றும் அழியாது.
படுகொலை செய்யப்பட்ட பிஞ்சு உறவுகளுக்கு மலர் அஞ்சலி. 🕊️
நினைவுகள் அழியாது!
நீதிக்கான குரல் ஓயாது!












