யாழில் ஆரம்பமான செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரும் “நீதியின் ஓலம் – 2” போராட்டம்!

0
10

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரும் “நீதியின் ஓலம் – 2” போராட்டம், யாழ்ப்பாணம் செம்மணி சந்தியில் இன்று (14) ஆரம்பமானது.

தாயகச் செயலணியின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த போராட்டத்தின் ஆரம்பத்தில், நினைவுத்தூபியின் முன்பாகப் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

இப்போராட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், பொது அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

இன்று தொடங்கிய இப்போராட்டம் எதிர்வரும் 16ஆம் திகதி வரை செம்மணியில் இரவு பகலாகத் தொடரவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here