முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் வி.எஸ். தவபாலன் வீட்டில் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல்!

0
19

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் வி.எஸ் தவபாலன் அவர்களின் வீட்டைச் சுற்றிவளைத்து புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்

​சிறிலங்கா காவல்துறையினரின் அலட்சியப் போக்கிற்குப் பின்ஜமுறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளது.

​தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் திரு. எஸ். தவபாலன் அவர்கள் வீட்டில் இல்லாத நேரத்தில், தங்களைப் புலனாய்வாளர்கள் என அடையாளப்படுத்திக் கொண்ட சிலர் கிளிநொச்சியிலுள்ள அவரது வீட்டிற்குச் சென்று அச்சுறுத்தும் வகையில் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

​நடந்தது என்ன?
​அச்சுறுத்தல்: திரு. தவபாலன் அவர்கள் அரசுக்கு எதிராகச் செயற்படுவதாகவும், அது தொடர்பான தகவல்களைப் பெறுமாறு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தமக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்கள் அவரது மனைவியிடம் தெரிவித்துள்ளனர்.

​மீண்டும் வருவோம் என எச்சரிக்கை

குடும்பத்தினரை அச்சுறுத்தும் வகையில் விசாரணைகளை முன்னெடுத்த அந்நபர்கள், மீண்டும் வருவதாகக் கூறிச் சென்றுள்ளனர்.


​கனகராயன்குளம் காவல்துறையினர் இழுத்தடிப்பு:!
​இச்சம்பவம் குறித்து கனகராயன்குளம் காவல்துறை நிலையத்தில் முறைப்பாடு செய்யச் சென்றபோது, காவல்துறையினர் அம்மாநிலத்தில் முறைப்பாட்டைப் பெற முடியாது எனக் கூறி நீண்டநேரம் இழுத்தடித்துள்ளனர். பின்னரே, தீவிர விவாதத்திற்குப் பிறகு முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

​தமிழ் மக்களின் உரிமைக்காய் முன்னிற்கும் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் கட்சியின் செயற்பாட்டாளர்கள் மீதான இத்தகைய புலனாய்வுத் துறையினரின் தொடர் கெடுபிடிகளையும், காவல்துறையினர்னினரின் அலட்சியப் போக்கையும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டித்துள்ளது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here