மூத்த பத்திரிகையாளர் ஞாநி காலமானார்! உடல் மருத்துவ கல்லூரிக்கு ஒப்படைப்பு!

0
221


மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஞாநி (வயது 63) உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவரது உடல் மருத்துவ கல்லூரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
தந்தையைப் போலவே ஊடகத்துறையில் இணைந்து பணியாற்றியவர் ஞாநி, 1980களின் இறுதியில் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் நாட்டையே உலுக்கிய போது முரசொலி நாளேட்டின் புதையல் பகுதியில் அது தொடர்பான தகவல்களை விரிவாக பதிவு செய்தவர் ஞாநி.
பத்திரிகையாளர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், அரசியல் விமர்சகர் என பன்முகத் தன்மை கொண்டவராக திகழ்ந்தவர் ஞாநி.
சிறுநீரக கோளாறால் சிகிச்சை பெற்று, கடந்த ஓராண்டாக உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வந்தார் ஞாநி. சென்னை கே.கே.நகரில் உள்ள இல்லத்தில் இன்று (15) மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஞாநி காலமானார்.
ஞாநியின் உடலுக்கு மூத்த பத்திரிகையாளர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஞாநியின் உடல் அவரது விருப்பப்படி சென்னை மருத்துவ கல்லூரியிடம் ஒப்படைக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here