யாழ். சாவகச்சேரியில் 3 வீடுகளில் கொள்ளை; 20 பவுண் நகைகள் திருட்டுப் போனது!

0
256

யாழ்ப்பாணம் சாவகச்சேரி கல் வயல் சண்முகானந்தா வீதியில் மூன்று வீடுகளில் ஒரே இரவில் திருட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று அதிகாலை வீட்டின் முன் கதவினை கூரிய ஆயுதம் ஒன்றினால் திறந்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்வயல் புலுட்டையன் பிள்ளையார் கோவில் கணக்காளரின் வீட்டில் 16 பவுண் நகைகளும் மற்றைய இரு வீட்டிலும் சேர்த்து மொத்தமாக 20 பவுண் நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் கொடுக்கப்பட்ட முறைப்பாட்டின் படி பொலிஸாரால் மோப்ப நாயின் உதவியுடன் வீட்டுப் பகுதிகளிலும் சோதனையினை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த களவுச் சம்பவத்தினை முன்னிட்டு அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here