பிரான்சு நாட்டில் சிறப்பாக நடைபெற்ற ஆற்றுகை வெளிப்பாட்டுத் தேர்வு 2024

0
55

அனைத்துலகத் தமிழ்க்கலை நிறுவகம்,  தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் பிரான்சுடன் இணைந்து நடாத்திய ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வு 20,21 ஏப்ரல் மாதம் சனி ஞாயிறு ஆகிய  இரண்டு நாட்களும் காலை 10 மணிமுதல் Espace Associatif des Doucettes என்னும் மண்டபத்தில் நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக நடராசர் இறைவணக்கமும்  அகவணக்கம் செய்யப்பட்டது. தொடர்ந்து மங்கல விளக்குகள் ஏற்றி வைக்கப்பட்டது. மங்கல விளக்கினை திரு.மேத்தா தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பரப்புரை பொறுப்பாளர்,திரு.பாலகுமாரன் பொறுப்பாளர் கூட்டமைப்பு திரு.நாகஜோதீஸ்வரன் பொறுப்பாளர் தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம்,திரு.காணிக்கைநாதன் செயலாளர் தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம் ஆகியோருடன் Garges les Gonesse உதவி நகரபிதா திரு.ZINAOUI, திருவாட்டி கள்.MORGADO, GUNOT, FREY SADASIVAM ஆகிய நகரசபை உறுப்பினர்கள் ஏற்றி வைத்தனர்.

இவ் ஆற்றுகை வெளிபாட்டுத்தேர்வுக்கு திருவாட்டிகள் மதிவதனி சுதாகரன்.சந்திரவதனி விஜய சுந்தரம் நிமாலினி ஜெயக்குமார் ஆகியோர் பரதநடன ஆற்றுகைக்கான நடுவர்களாகவும் திருவாளர்கள் உமா காந்தன் முத்துக்குமாரசாமி, செகசோதி ஆறுமுகம், பத்ம லிங்கம் வசந்தன் ஆகியோர் இசைக்கலை நடுவர்களாகவும் கடமையாற்றியிருந்தனர்.

நடுவர்களையும், மற்றும் அனைவரையும் வரவேற்று வரவேற்புரையை திரு.காணிக்கைநாதன் தலைமைப் பணியக செயலாளர் அவர்கள் ஆற்றியிருந்தார்.

சனிக்கிழமை 20.04.2024  நடைபெற்ற நடனத் தேர்வில் திருவாட்டி தில்லைரூபன் மோகனரூபி  அவர்களின் மாணவிகள் 

செல்வி. நாகராஜன் கௌசிகா, ( ஆதிபராசக்தி கலைப்பள்ளி ) 

செல்வி. சிறிகாந்தராசா தமிழருவி ( தமிழ்ச்சோலை குசன்வில்)

திருவாட்டி மகேந்திரராஜா தனுசா அவர்களின் மாணவிகள் செல்வி. குலநாதன்    

   விவேக்கா ( கவின்கலையகம்) 

செல்வி. அமிர்தராஜா ஆரண்யா ( கவின் கலையகம்)

செல்வி. சீராளன் திவ்வியா ( கவின் கலையகம்)

செல்வி. கேதீஸ்வரன் கெனிதவி ( கவின் கலையகம்)

செல்வி. செல்வரதன் நிந்துசா ( தமிழ்ச்சோலை செவ்ரோன் )

 திருவாட்டி கிறிஸ்ரியன் மதுசா ( தமிழ்ச்சோலை செல் மாணவி ) 

ஞாயிற்றுக்கிழமை 21.04.2024 நடைபெற்ற நடனத் தேர்வில் நடன தேர்விலும், இசை வாய்ப்பாட்டு , வயலின் தேர்வுகளிலும் பின்வரும் மாணவர்கள் பங்கெடுத்திருந்தனர்.

நடன ஆசிரியர், திருவாட்டி தில்லை ரூபன்  மோகனரூபி அவர்களின் மாணவிகள்  செல்வி. கேதீஸ்வரன் சந்தியா ( தமிழ்ச்சோலை குசன்வில்)

 இரவீந்திரன் ரம்மியா ( தமிழ்ச்சோலை குசன்வில்)

 திருஞானசுந்தரம் ஆதாங்கனி ( ஆதிபராசக்தி கலைப்பள்ளி )

நடன ஆசிரியர். திருவாட்டி செல்வராஜ் றோணி அவர்களின் மாணவி  செல்வி. சதீஸ்வரன் நிதுசா  ( சேர்ஜி தமிழ்ச்சோலை)

இசை வாய்ப்பாட்டு ஆசிரியர் திருவாட்டி சுரேந்திரன் தேவமனோகரி அவர்களின் மாணவி செல்வி கணேஸ்வரன் கீர்த்தனா ( தமிழ்ச்சோலை தோர்சி)

வயலின் ஆசிரியர் திருவாட்டி. கந்தையா கோமளா அவர்களின் மாணவி செல்வி மயில்வாகனம் அபிராமி ( தமிழ்ச்சோலை லாக்கூர்னேவ்)மற்றும்  செல்வன். பகீதரன் பிரகாஷ் ( சோதியா கலைக்கல்லூரி மாணவன்

இசை வாய்ப்பாட்டு ஆசிரியர். திருவாட்டி. திருமதி. கணானந்தன் சிவகௌரி அவர்களின் மாணவி சிறிநிவாஸ் மகிசா ( சாயி சுருதிலயா )

ஆகியோர் தமிழ்க்கலைத்தேர்வில் பங்கெடுத்திருந்தனர்.இரண்டு  நாட்களும் நடைபெற்ற இத்தேர்வு நிகழ்வில் மாணவர்கள், கலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், கட்டமைப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர். ஆற்றுகை வெளிப்பாட்டுத்தேர்வு ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணியளவில் சிறப்பாக நிறைவு பெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here