நெதர்லாந்தில் மகிழுந்து விபத்தில் இரு பெண் பிள்ளைகளின் தாய் பலி!

0
59

புத்தூர் பகுதியைச் சேர்ந்த இரண்டு பெண் பிள்ளைகளின் இளம் தாய் நெதர்லாந்தில் இன்று வியாழக்கிழமை காலை இடம் பெற்ற மகிழுந்து விபத்தில் உயிரிழந்துள்ளார் .

இன்று காலை வேலைக்கு சென்று கொண்டிருந்த போது குறித்த விபத்து சம்பவம்
இடம்பெற்றுள்ளது

மட்டுவில் பகுதியில் திருமணம் செய்த குறித்த பெண் இரண்டு பிள்ளைகள் மற்றும் கணவருடன் நெதர்லாந்தில் வாழ்ந்து வருகின்றார்

சம்பவத்தில் புத்தூர் பகுதியைச் சேர்ந்த புஸ்பகரன் நளாயினி (வயது 44) என்ற பெண்ணே விபத்தில் உயிரிழந்தவர் ஆவார் .

விபத்து சம்பவம் தொடர்பாக அந்நாட்டு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

இச் சம்பவம் நெதர்லாந்து வாழ் தமிழர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here