மண்டைதீவு படகு விபத்தில் 6 மாணவர் பலி !

0
398


இன்று (28/08/2017) மண்டைதீவு கடற் பகுதியில் நடந்த படகு விபத்தில் 6 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். முன்னர் ஐவர் பலியாகி ஒருவர் காணாமல் போயிருந்தக தெரிவிக்கப் பட்ட நிலையில் அவரது உடலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்கள் இம்முறை உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.
மண்டை தீவுக்கு அருகில் உள்ள படகு தரிப்பிடம் ஒன்றில் இருந்து படகில் சென்ற சமயமே இந்தச் விபத்து சம்பவம் நடந்துள்ளது.
அந்தப் பகுதியில் கட்டப்பட்டிருந்த படகு ஒன்றை எடுத்து கடலுக்குச் சென்றபோதே இந்த இடர் நடந்துள்ளது என்று கூறப்படுகின்றது.
இன்று பிற்பகல் 1.30 மணியளவில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த மாணவர்களின் சடலங்கள் தற்போது, யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.
இன்று கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பிரதான பாடங்கள் நிறைவடைந்த நிலையில், குறித்த மாணவர்கள் படகு சவாரி செய்யமுற்பட்டபோது படகு கவிழ்ந்ததில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
உயிரிழந்த மாணவர்கள் யாழ்.கொக்குவில், நல்லூர், உரும்பிராய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
படகில் ஏழு பேர் பயணித்துள்ளனர். ஒருவர் நீந்திக் கரை சேர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here