யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மலையக தியாகிகளின் நினைவுதினம்.

0
70

மலையக தியாகிகளின் நினைவுதினம் புதன்கிழமை (10) யாழ்ப்பாண பல்கலைக்கழக பொதுத் தூபியில் நடைபெற்றது.

மலையகத்தில் படுகொலை செய்யப்பட்ட உறவைகளையும், உரிமைக்காக போராடி உயிர்நீத்த உறவைகளையும் நினைவுகூர்ந்து இந்த நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன்போது ஈகைச் சுடரேற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதன்போது பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களால் உரைகள் ஆற்றப்பட்டன.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here