வடக்கு கிழக்கில் வாழ்வாதாரத்தை இழந்துள்ள மக்கள்!

0
64

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாடுகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்துள்ள நிலைமையின் கீழ் அங்கு வாழும் பலர் வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்கள் பால் பொருட்கள் உட்பட கால்நடை வளர்ப்பு நடவடிக்கைகளின் மூலம் தமது வாழ்வாதாரத்தை பேணுவதற்கு மாடு மற்றும் ஆடுகளையே அதிகம் பயன்படுத்துகின்றனர்.
எவ்வாறாயினும், அண்மையில் ஏற்பட்ட குளிரான வானிலை காரணமாக 1,800 மாடுகள் மற்றும் ஆடுகள் உயிரிழந்துள்ள நிலையில், இவற்றை வாழ்வாதாரத்திற்காக பயன்படுத்தும் மக்கள் தற்போது மிகவும் அவல நிலைக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here