நமக்கு நாமே குழி தோண்டுகிறோம்! எச்சரிக்கிறார் ஐ. நா. செயலாளர்

0
71

இயற்கையைக் “கழிப்பறை” போல்
பாவிப்பதை நிறுத்த கோருகின்றார்

கிளாஸ்கோ பருவநிலை உச்சி மாநாட்
டின் (COP26) இரண்டாம் நாளான இன்று
மிக முக்கிய தலைவர்கள் பலரது உரை
கள் இடம்பெற்றுள்ளன. அங்கு முக்கிய
பிரமுகராக உரை நிகழ்த்திய ஐ. நா. செய
லாளர் நாயகம் அன்டோனியோ குட்ட
ரெஸ் (António Guterres) “நாமே நமக்கான புதைகுழியைத் தோண்டிக் கொண்டிருக்
கிறோம்” (“We are digging our own graves”)
என்று எச்சரித்தார்.

“கனிம எரிபொருள்கள் மீதான எங்கள்
அடிமைத்தனம், மனித குலத்தை அழி
வின் விளிம்பில் தள்ளிவிட்டது. கார்பன்
மூலம் நம்மை நாமே கொன்றது போதும்.
இயற்கையைக் கழிப்பறை போன்று நடத்
தியது போதும். துளையிடுவதும் தோண்
டுவதும் எரிப்பதுவும் இனிப் போதும்…”
என்று மன்றாட்டமாகக் கூறினார் ஐ. நா.
செயலர்.

இதுவரை சுமார் 120 நாடுகளது தலைவர்
கள் கிளாஸ்கோ மாநாட்டுக்கு வந்து சேர்ந்துள்ளனர். நூற்றுக்கணக்கான
அறிவியலாளர்கள், சூழலியல் செயற்
பாட்டாளர்கள், மற்றும் பத்திரிகையாளர்
கள் என அங்கு கூடியுள்ள ஆயிரக்கணக்
கானோர் முன்பாக மாநாட்டை நடத்தும்
நாட்டின் பிரதமர் பொறிஸ் ஜோன்சன்
தொடக்கவுரை நிகழ்த்தினார்.

கற்பனைக் கதைப் பாத்திரமாகிய ரகசிய உளவாளி ஜேம்ஸ் பொண்ட்(secret agent James Bond) பூமியை அழிக்கவல்ல வெடி குண்டு ஒன்றுடன் சேர்த்துக் கட்டப்பட்ட நிலையில் அக் குண்டைச் செயலிழக்கச் செய்ய எவ்வாறெல்லாமோ முயற்சிக்கி
றார்.அந்தக் குண்டு வெடித்தால் பூமி முற்
றாக அழிந்துபோகும் ஆபத்து.

வெப்பமூட்டப்பட்ட பூமியின் இன்றைய
நிலையை அந்த ஜேம்ஸ் பொண்ட் கதை
யுடன் ஒப்பிட்டுப் பேசினார் பொறிஸ்
ஜோன்சன்.”நாங்கள் கிட்டத்தட்ட அதே
பூமியின் அழிவு நாள் (doomsday) நிலை
யில் இருக்கிறோம்”-என்று அவர் உலகத் தலைவர்களைப் பார்த்துக் கூறினார்.
இன்றைய தொடக்க உரையில் பொறிஸ் ஜோன்சன் கூறிய இந்த”ஜேம்ஸ் பொண்
ட்” கதையை ஊடகங்கள் கட்டம் கட்டி வெளியிட்டுள்ளன.

உலக நாடுகள் அனைத்தையும் விட மிக
உயர்ந்த அளவில் கார்பனை வெளியேற்
றுகின்ற முதல் நாடாகிய அமெரிக்காவி
னது அதிபர் ஜோ பைடனும் மாநாட்டில்
உரையாற்றினார்.சுருக்கமான அவரது
உரை அமெரிக்காவின் கார்பன் குறை
ப்பு உத்திகள் தொடர்பான தகவல்களை
உள்ளடக்கியிருக்கவில்லை. அவை பின்
னர் வெளியாகும் என்று அமெரிக்க அதி
காரிகள் தெரிவித்துள்ளனர்.

வரலாற்றில் அமெரிக்கா வெளியேற்றிய
கார்பனின் அளவை உலகில் வேறு எந்த
நாடுகளும் இதுவரை எட்டவில்லை என்
பதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
2019 தரவுகளின் படி அது 5,107 மெகா தொன் (megatonnes) கார்பனை (CO2) வெளியேற்றியிருக்கிறது. 1750 ஆம் ஆண்டு முதல் அமெரிக்கா வெளியேற்
றிய கார்பனின் உத்தேச மதிப்பீடு 410.2பில்லியன் தொன்கள் (bn tonnes) என்று பிபிசி செய்தி ஒன்று கூறுகிறது.
அதிகமாக மாசு வெளியேற்றுகின்ற நாடுகளில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் சீனாவும் மூன்றாவது ஸ்தானத்
தில் ஜேர்மனியும் உள்ளன. மற்றொரு
முக்கிய நாடு ரஷ்யா.இவற்றுக்குப் பின்
னால் இந்தியா உள்ளது.

சீனா, ரஷ்யா இருநாடுகளது தலைவர்
களும் கிளாஸ்கோ மாநாட்டில் நேரடியாகப் பங்குபற்றவில்லை.

          -பாரிஸிலிருந்து குமாரதாஸன். 
                                                    01-11-2021

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here