சங்குப்பிட்டியில் கோரவிபத்து: முச்சக்கர வாகனம் நசிந்து மூவர் படுகாயம்!

0
290

கிளிநொச்சி – பூநகரி, சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் இன்று (08) புதன்கிழமை மாலை இடம்பெற்ற டிப்பர் – முச்சக்கர வண்டி விபத்தில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மணல் ஏற்றிவந்த டிப்பர் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கர வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது முச்சக்கர வண்டி முழுமையாக சேதமடைந்துள்ளது.

சம்பவத்தில் கிளிநொச்சியை சேர்ந்த யோ.பிரியதர்சன் (25-வயது), உதயநகரை சேர்ந்த ப.தர்சிகன் (24-வயது), ஆனந்தபுரத்தை சேர்ந்த எஸ்.செல்வகுமார் (24-வயது) ஆகியோரே படுகாயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here