பிரான்சு ஆர்ஜொந்தை தமிழ்ச்சங்கமும் தமிழ்ச்சோலையும் இணைந்து நடாத்திய பொங்கல் விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.
தமிழர் கலைபண்பாட்டு விழுமியங்களைப் போற்றி அடுத்த சந்ததிக்கு எடுத்துச்செல்வோம் என்ற வாசகத்தோடு இடம்பெற்றது இந்நிகழ்வில் ஆர்ஜொந்தே நகரபிதா உள்ளிட்ட பலரும் எமது தமிழர் மரபு ஆடைகளை அணிந்து கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றன.




























