கடந்த 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் திகதி அதிகாலை நடந்த சம்பவம் உலகமே உறைந்து போன ஒரு தினமாக வரலாற்றில் பதிய வைத்துள்ளது.

ஆம் ஆழிப்பேரையின் கோரத் தாண்டவம் ஏற்பட்டு இன்றோடு 21 வருடங்கள் ஆகின்றன.நேற்று நடந்தது போல் கோரத்தாண்டவம் எம் கண்முன்னே இன்னும் நின்று நிழலாடுகின்றது.
இந்தோனேசியாவின் சுமாத்ரா தீவுகளில் கடலுக்கடியில் ஏற்பட்ட பாரிய நில அதிர்வைத் தொடர்ந்து உருவாகிய ஆழிப்பேரலையானது இந்து சமுத்திரத்தின் கரையோர நாடுகளைத் தாக்கி அழிவை ஏற்படுத்தியது. இந்த ஆழிப்பேரலையின் கோரத் தாண்டவத்தால் இலங்கையில் 30 ஆயிரத்து 196 உயிர்கள் காவுகொள்ளப்பட்டன.

சுனாமி அனர்த்தத்தில் காவுகொள்ளப்பட்ட மக்களை நினைவுகூரும் வகையில் இன்று (26) வெள்ளிக்கிழமை தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் ஆழிப் பேரலையால் பலியான உறவுகளுக்கான நினைவேந்தல்கள் இடம்பெறுகின்றன.


