
மாமனிதர் ஜோசெப் பரராஜசிங்கம் அவர்களின் 20 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 25.12.2025 வியாழக்கிழமை தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமையகத்தில் இடம்பெற்றது.

கடந்த 25.12.2005 அன்று மட்டக்களப்பு தேவாலயத்தில் பாலன்பிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளை மட்டக்களப்பு பேராயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அவர்கள் முன்னிலையில் மிலேச்சத்தனமான முறையில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.





