
ஆழிப்பேரலை அழிவின் 21 ஆண்டு நிறைவடைந்துள்ள இன்றைய நாளில் மறைந்த உறவுகளை நினைவில் ஏந்தி இறை பிராத்தனை செய்யும் நிகழ்வுகள் மட்டக்களப்பு நாவலடி கடற்கரைப் பகுதியில் இடம்பெற்றது.

மேலும் புதிய கோட்டமுனை விளையாட்டுக் கழகம் இரத்ததான நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்து இருந்தது

அந் நிகழ்வுகளில் உயிர் நீத்த உறவுகளுக்கு மலர்தூவி சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.




