ரஷ்யாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைப் பொதிக்குள் வண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, சிறீலங்காவிலிருந்து தேயிலை உள்ளிட்ட விவசாய விளை பொருள்களை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தற்காலிக கட்டுப்பாடு விதித்துள்ளது.
நாளை தொடக்கம் இந்தத் தடை நடைமுறைக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேயிலைச் சந்தையில் ஈரானுக்கு அடுத்த இடத்தில் ரஷ்யா உள்ளது. சிறீலங்காவின் தேயிலை ஏற்றுமதியில் 11.3 வீதம் ரஷ;யாவுக்கே மேற்கொள்ளப்படுகிறது. 143 மில்லியன் டொலர் பெறுமதியான தேயிலையை ரஷ்யா இறக்குமதி செய்து வருகிறது.