
பிரான்சில் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்துடனும் தமிழ் இணையக் கல்விக் கழகத்துடனும் இணைந்து, கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து தமிழியல் பட்டப் படிப்பினை மேற்கொண்டு வருகிறது.

அன்று தொட்டு இன்று வரை மூவாண்டு தமிழியல் பட்டப் படிப்பினைச் சிறப்பாக நிறைவு செய்த பட்டகர்களுக்கான பிரியாவிடை நி்கழ்வும் புதிய மாணவரை வரவேற்கும் இணைவு நிகழ்வும் வரும் 15.03.2026 ஞாயிற்றுக்கிழமை பிரான்சில் நடைபெறவுள்ளது. இதுதொடர்பான மேலதிக விவரங்கள் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு:-
வணக்கம் !
பிரான்சில் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்துடனும் தமிழ் இணையக் கல்விக்கழகத்துடனும் இணைந்து, கடந்த 15 ஆண்டுகளாகத் தொடர்ந்து தமிழியல் பட்டப்படிப்பினை மேற்கொண்டு வருவது யாவரும் அறிந்ததே!
மூவாண்டுத் தமிழியல் பட்டப்படிப்பினைச் சிறப்பாக நிறைவு செய்த பட்டகர்களுக்கான பிரிவு நிகழ்வும் புதிய மாணவரை வரவேற்கும் இணைவு நிகழ்வும் நடைபெறவுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இந்நாள் கற்றல் நிறைவினைப் போற்றுதலும் புதிய கற்கைநெறித் தடத்தினைத் தொடக்கி வரவேற்பதுமாகிய இரு இனிய வேளைகளை ஒருங்கிணைக்கும் சிறப்பு நாளாக அமையும் என்பதில் ஐயமில்லை.
இத்தகவலை வளர்தமிழ்-12 இல் கற்கும் மாணவர்களுக்கும், வளர்தமிழ்-12 நிறைவு செய்த மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
“நம் வாழ்வும் வளமும் தமிழ்மொழி என்போம்”





