கிளிநொச்சியில் உந்துருளி விபத்து: இருவர் பரிதாபச் சாவு!

0
330

கிளிநொச்சி மாவட்டம் ஆனையிறவு தட்டுவன் கொட்டி பகுதியில் இடம்பெற்ற உந்துருளி விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரண்டு உந்துருளிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதனாலேயே இந்த அனர்த்தம் நேர்ந்துளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணத்திலிருந்து கிளி நொச்சி நோக்கிப் பயணித்த உந்துருளியொன்றும் கிளி நொச்சியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த உந்துருளியொன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.
இதனால் இரண்டு உந்துருளியிலும் இருவர்வீதம் பயணித்த நான்கு பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதனால் சம்மந்தப்பட்ட நால்வரில் இருவர் உயிரிழந்துள்ளதோடு எஞ்சிய இருவரும் சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் பலியானவர்கள் கிளிநொச்சி தட்டுவன்கொட்டி மற்றும் யாழ்ப்பாணம் கரவெட்டியைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதுதொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here