யாழில் 23 இந்திய மீனவர்கள் கைது!

0
190

இலங்கை கடல் எல்லைக்குள் கடல் எல்லையை மீறி மீன் பிடியில் ஈடுபட்ட 23 இந்திய மீனவர்கள் யாழ்ப்பாண குடாநாட்டு கடற்பரப்பில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த மீனவர்கள் இன்று (12) அதிகாலை கச்சதீவு மற்றும் நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களிடம் இருந்து 5 படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், கைது செய்யப்பட்ட 23 மீனவர்களையும் யாழ். கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here