பொறுப்புக்கூறல் விடயத்தில் இலங்கையின் நேர்மைத் தன்மையை ஐக்கிய நாடுகள் சபை எதிர் பார்க்கின்றது. அந்த வகையில் இறுதிக்கட்டப் போர் மற்றும் அதற்கு பின் னரான நிலைமைகள் உள்ளிட்ட இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் மதிப்பீடு செய் வது இலங்கை விஜயத்தின் நோக்கமாக அமைந்துள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் விஷேட நிபுணர் பப்புலோ டி கிரீப் தெரிவித்துள்ளார்.
இலங்கை விஜயம் தொடர்பான முழுமையான அறிக்கை ஐக்கிய நாடு கள் மனித உரிமைகள் பேரவையின் 38 ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்க உள்ளேன். எனவே ,இந்த விஜயம் முக்கியமானதாகவே அமைகின்றது எனவும் அவர் ; மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இறுதிக்கட்ட போர் மற்றும் அதற்கு பின்னரான நிலைமைகள் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கையின் பொறுப்புக்கூறல் தொடர்பில் மதிப்பீடு செய்வதற்காக ஐக் கிய நாடுகள் சபையின் விஷேட நிபுணர் பப்புலோ டி கிரீப் செவ்வாய்க்கிழமை இலங்கை கின்றார்.
உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை செல்லும் ஐக்கிய நாடுகள் சபையின் உண்மை, நீதி, நட்டஈடு மற்றும் மீள் நிகழாமை தொடர்பான விஷேட நிபுணர் பப்புலோ டி கிரீப் எதிர்வரும் 23 ஆம்திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பார்.
இவர் தங்கி இருக்கும் காலத்தில் சிறீலங்கா அரசாங்கத்தின் மத்திய , மாகாண மட்ட அதி கா ரிகள் , மக்கள் பிரதிநிதிகள், நீதித்துறையினர் இராணுவ தலைமை அதிகாரிகள் , மதத்தலை வர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதிகள், சிவில் சமூக பிரதிநிதிகள், பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் உள்நாட்டில் உள்ள சர்வதேச சமூகத்தினர் என பலதரப்பட்டவர்களை சந்தித்து பேச்சுக்களை நடத்த உள்ளார் என்றும்.
வடக்கு மற்றும் கிழக்கு உட்பட பல பகுதிகளுக்கும் விஜயம் செய்து மதிப் பீட்டு நடவடிக்கை களில் ஈடுபட உள்ளார் என்றும் . போரின் பின்னரான முன்னேற்றங்கள் மற்றும் வழங் கப்பட்ட உறுதிமொழிகளின் முன்னேற்றங்கள் என பரந்தளவில் விடயதானங்களை ஆராயவுள்ளதாக ஐ. நா.விஷேடநிபுணர்பப்புலோ டி கிரீப் இலங்கை விஜயம் தொடர்பில் கருத்து வெளியிட் டுள்ளமை குறிப்பிடத்தக்கது.