
மனித உரிமைகள் ஆணையகத்தின் 63 கூட்டத் தொடரினை முன்னிட்டு சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணைநடாத்த வேண்டியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதை வலியுறுத்தியும் ஐ .நா நோக்கியஈருருளி பயணக்கவனயீர்ப்பு போராட்டம் 26.08.2026 அன்று பிரித்தானியாவிலிருந்து ஆரம்பித்து அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் ,ஐரோப்பிய பாராளுமன்றம் ஊடாக 14.09.2026 அன்று ஜெனிவா ஐக்கிய நாடுகள் அவை முன்றலை வந்தடைவுள்ளது. 7 ம் நாள் ஈருருளிப் பயணம் ஆனது லக்சம்பேர்க் வெளிவிவகார அமைச்சு ஐரோப்பிய நீதிமன்றம் மனுகையளிப்பை தொடர்ந்து ஜேர்மனி எல்லை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. 8 ம் நாளான நேற்று முன்தினம் (3/09/2026) dillinen நகரில் ஆரம்பித்து saarbrucken நகரபிதாவிற்கான மனு கையளிப்பை தொடர்ந்து landau நகரை நோக்கி பயணித்தது 9 ம் நாளான நேற்று 4/9/2026 ஈருருளிப்பயணமானது காலை 8.30 மணிக்கு Landau நகரபிதாவுடனான சந்திப்பை தொடர்ந்து Karlsruhe நகரபிதாவிற்கான மனு கையளிப்பு இடம்பெற்றது தொடர்ந்து ஜேர்மன் பிரான்ஸ் எல்லையை நோக்கி பயணிக்கிறது.

தமிழின அழிப்பிற்கான நீதிவேண்டியும் தமிழீழ விடுதலையினை வலியுறுத்திய கொட்டொலியோடும், இலண்டனில் இருந்து ஜெனீவா நோக்கி ஈருருளிப் பயணமானது ஆரம்பமாகியுள்ளது. இந்த அறவழிப்போராட்டமானது, தமிழின அழிப்புப் போருக்குப் பின் இன்றும் தொடரும் திட்டமிட்ட இனவழிப்பினை அனைத்துலக குமுகாயத்திற்கு வெளிப்படுத்துவதும் அனைத்துலக நீதியினை வேண்டுவதுமாகும்.
தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டி 32 ஆவது தடவையாக ஜெனிவா நோக்கிய அறவழிப்போராட்டமாக இது தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின் 63 ஆவது கூட்டத்தொடரினை முன்னிட்டு, தமிழின அழிப்பிற்கு எதிராக,உணர்வெழுச்சியுடன் அனைத்துல நீதி வேண்டி, விடுதலை நோக்கி வீறுகொண்டு இந்த அறவழியில் இப்போராட்டம் பயணிக்கின்றது..
எம் தமிழ் உறவுகளே!
தமிழின அழிப்பற்கு உள்ளாக்கப்பட்டு நிர்க்கதியான நிலையில் ஏதிலிகளாக பல்வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்த தமிழர்களாகிய நாம் ,தம்வாழிட நாடுகளில் தமிழின அழிப்பிற்கான நீதியினை வேண்டி,எம் வாழிட நாடுகளை தமிழர்களின் நியாயமான நீதிக்கான கோரிக்கைக்கு குரல்கொடுக்க வைப்பதன் மூலம் அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்தில் சிங்களப் பேரினவாத அரசினை நிறுத்தி தமிழின அழிப்புக்கு நீதி வேண்டும் என்பதையும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதை உறுதியாக வலியுறுத்த முடியும்.
தியாக தீபம் லெப் கேணல் திலீபன் அவர்கள் கூறிய “மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்” என்ற உன்னத வேணவாவினை நெஞ்சிருத்தி இப்போராட்டங்களுடன் அனைவரும் இணைந்து ஓரணியாய் முரசறைவோம்.

“ காலத்திற்கேற்ப வரலாற்றுக் கட்டாயத்திற்கமைய போராட்ட வழிமுறைகள் மாறலாம் ஆனால் போராட்ட இலட்சியம் மாறப்போவதில்லை “ -தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு வே. பிரபாகரன்”
“தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்”



