
தமிழின அழிப்புக்கு நீதி கோரி கடந்த 26.07.2026 அன்று பிரித்தானியாவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட ஜெனிவா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் 15 ஆவது நாளான இன்று 09.09.2026 புதன்கிழமை காலை பிரான்சில் mairie de Mulhouse 2 Rue Pierre et Marie Curie, 68100 Mulhouse முன்றிலில் இருந்து அகவணக்கத்தோடு ஆரம்பித்து, சுவிஸ் எல்லை நோக்கிப் பயணிக்கிறது

நேற்று 08.09.2026 செவ்வாய்க்கிழமை மாலை mairie de Mulhouse Mulhouse நகரபிதாவுடன் சந்திப்பை மேற்கொண்டு, அவரிடம் தமிழின அழிப்புக்கு நீதிகோரும் மனுவைக் கையளித்த பின்னர் நிறைவடைந்தது.

குறித்த மனிதநேய ஈருருளிப் பயணம் பிரான்சில் இருந்து சுவிஸ் நாட்டினுள் சென்று எதிர்வரும் 14.09.2026 திங்கட்கிழமை ஜெனிவா ஐக்கிய நாடுகள் சபை முன்றிலைச் சென்றடையவுள்ளது.

ஐரோப்பிய வாழ் தமிழர்கள் அனைவரையும் எதிர்வரும் 14.09.2026 திங்கட்கிழமை ஐ.நா.முன்றிலில் இடம்பெறவுள்ள மாபெரும் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றுகூடலில் அணிதிரளுமாறு மனிதநேய ஈருருளிப் பயணத்தை மேற்கொள்ளும் மனிதநேய செயற்பாட்டாளர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.
பிரான்சில் இருந்தும் 14.09.2026 திங்கட்கிழமை இலவச பேருந்துகள் ஜெனிவா நோக்கி பயணிக்க உள்ளமை அனைவரும் அறிந்ததே.
(எரிமலை செய்திப் பிரிவு)


