பிரான்சு மூல்ஹவுஸ் நகர பிதாவுடன் ஈருருளிப் பயண மனிதநேய செயற்பாட்டாளர்கள் சந்திப்பு!

0
30

மூல்ஹவுஸ் மாநகர சபை முன்றிலில் நிறைவடைந்த இன்றைய 14 ஆம் நாள் தமிழின அழிப்புக்கு நீதிகோரும் மனிதநேய ஈருருளிப் பயணத்தில் முன்னதாக மூல்ஹவுஸ் நகர பிதாவுடன் மனிதநேய செயற்பாட்டாளர்கள் சந்திப்பினை மேற்கொண்டதுடன், நகரபிதாவுக்கான மனுவையும் கையளித்தனர்.

இச்சந்திப்பின் போது, எமது தேசத்தில் சிறிலங்கா இனவாத அரசினால் காலங்காலமாகத் தமிழ் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், தமிழின அழிப்பு கள் தொடரபாகவும் செம்மணி மனிதப் புதைகுழியில் தோண்டி எடுக்கப்பட்டுவரும் உண்மை நிலை தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது

தொடர்ந்து பதிலளித்த நகரபிதா குறித்த விடயங்கள் தொடர்பில் உரியவர்களுக்குத் தெரியப்படுத்துவதாகவும், தான் தமிழ்மக்களுக்கு ஆதரவு தருவதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here