வல்வெட்டித்துறையில் விவசாய அமைப்புகள் கஜேந்திரகுமார் எம்பியுடன் கலந்தாய்வு!

0
5

​வல்வெட்டித்துறை, கொம்மந்தறை சனசமூக நிலையத்தில் வல்வெட்டித்துறை விவசாய அமைப்புகள் மற்றும் விவசாய சம்மேளனங்கள் இணைந்து ஏற்பாடு செய்த விசேட கலந்தாய்வுச் சந்திப்பு இடம்பெற்றது.

.​இச்சந்திப்பிற்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களை விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள் நேரில் அழைத்து விரிவாகக் கலந்துரையாடினர்..
விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள்:
புகையிலைச் செய்கை தடையிலிருந்து முழுமையாக மீள 3 – 4 வருட கால அவகாசம் வழங்கப்பட வேண்டும்.
புகையிலைக்குப் பதிலாகச் சிறந்த மாற்றுப் பயிர் திட்டம் அறிமுகப்படுத்தப்பட வேண்டும்.
மாற்றுப் பயிராகச் சின்ன வெங்காயத்தைப் பயிரிட்டுச் சந்தைக்குக் கொண்டுவரும் வேளையில், அரசாங்கம் பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதால் ஏற்படும் நஷ்டத்தைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினரின் உறுதிமொழி:
விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளையும் மனவேதனைகளையும் கேட்டறிந்த நாடாளுமன்ற உறுப்பினர், இப்பிரச்சினையை எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வில் முன்வைத்து உரையாடுவதோடு, விசேட பிரேரணை ஒன்றையும் கொண்டு வருவதாக உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here