பூநகரி கிராமங்களை விழுங்கும் காற்றாலைத் திட்டம்: நேரில் வந்த தமிழ்த்தேசியமக்கள்முன்னணி!

0
38

பூநகரியின் பூர்வீகக் கிராமங்களான கிராஞ்சி, வலைப்பாடு, வேரவில் மற்றும் பொன்னவெளிப் பகுதிகள் இன்று பாரிய அழிவை எதிர்நோக்கியுள்ளன! பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் கிராஞ்சி கிராமத்தில் 700-க்கும் மேற்பட்ட குடும்பங்களின் குடியிருப்புகளையும், பாரம்பரிய தென்னந்தோப்புகளையும் அழிக்கும் நோக்குடன், மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி அரசாங்கத்தால் காற்றாலைத் திட்டம் திணிக்கப்பட்டு வருகிறது.

இதன் பின்னாலுள்ள ஆபத்துகள்:-
🔴 34 குடும்பங்கள் தங்களின் சொந்த இருப்பிடங்களையும் நிலங்களையும் உடனடியாக இழக்கும் அபாயம்.
🔴 ஒட்டுமொத்தமாக கிராஞ்சி கிராமத்தில் வாழும் 700 குடும்பங்களின் எதிர்காலமும், வாழ்வாதாரமும் முற்றாக முடக்கப்படும் நிலை.

தங்களின் மண்ணையும் வாழ்வையும் காக்க அனைத்து அரசியல் தரப்புகளின் ஆதரவையும் கோரி மக்கள் அவசரக் குரல் எழுப்பியுள்ளனர்.மக்களின் இந்த நியாயமான வேண்டுகோளுக்கு இணங்க, #தமிழ்த்தேசியமக்கள்முன்னணியின் தலைவர் கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன்) அவர்கள் இன்று நேரடியாகப் பூநகரிப் பகுதிகளுக்கு விரைந்தார்!
பாதிக்கப்படும் குடியிருப்புகள், விவசாய நிலங்கள் மற்றும் கடலோரப் பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டு, மக்களின் நிலமைகளை ஆராய்ந்தார்.

கிராமங்களின் வாழ்வையும் வளத்தையும் காக்க, மக்கள் முன்னெடுக்கவுள்ள அனைத்து நியாயமான போராட்டங்களுக்கும் நாடாளுமன்ற மட்டத்திலும், களத்திலும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி என்றும் முன்னின்று முழுமையான ஆதரவை வழங்கும்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here