
2006-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 04 அன்று திருகோணமலை மூதூரில் “வறுமைக்கு எதிரான அமைப்பு” (ACF) நிறுவனத்தில் பணியாற்றி, கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்ட 17 தமிழ் நிவாரணப் பணியாளர்களின் 20-ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று (04/08/2026) மாலை 5.00 மணிக்கு கொக்குவில் அமைந்துள்ள எமது தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் மதிப்பிற்குரிய செல்வராசா கஜேந்திரன் அண்ணா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டு படுகொலை செய்யப்பட்ட 17 உறவுகளுக்கும் சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

20 ஆண்டுகள் உருண்டோடினாலும் எமது மண்ணில் நிகழ்த்தப்பட்ட அநீதிகளுக்குச் சர்வதேச நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் ஓயாது!












