
” மூதூர் தொண்டு நிறுவன பணியாளர்கள் படுகொலை என்பது ஆகஸ்ட் 4, 2006 அன்று திருகோணமலை மாவட்டம் மூதூரில் இடம்பெற்ற ஒரு கோர நிகழ்வு. இதில் பிரான் அரசைத் தளமாகக் கொண்ட ‘அக்ஷன் பெயிம்’ (Action contre la Faim – ACF) என்ற சர்வதேச தொண்டு நிறுவனத்தின் உள்ளூர் பணியாளர்கள் 17 பேர் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 4 பெண்களும் அடங்குவர்.
நிவாரணப் பணியில் ஈடுபட்டிருந்த மனிதாபிமானப் பணியாளர்கள் வரிசையாக உட்கார வைக்கப்பட்டு சுடப்பட்டனர்.சர்வதேச மனித உரிமைகள் சட்டப்படி இது ஒரு போர்க்குற்றமாகக் கருதப்பட்டது.ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமை அமைப்புகள் இப்படுகொலையைக் கடுமையாகக் கண்டித்தன.
இப்படுகொலைக்கு நீதி கோரி பல ஆண்டுகளாக உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் குரல்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.குற்றவாளிகள் இதுவரை முறையாக அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்படவில்லை.


