பிரான்சில் இடம்பெற்ற செஞ்சோலை வளாகப் படுகொலை 20 ஆம் ஆண்டு மற்றும் தோழர் செங்கொடி 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

0
30

சிங்கள ஆட்சியாளர் தமிழீழ மக்களை மட்டுமல்ல பள்ளிக் குழந்தைகளையும் விட்டுவைக்கவில்லை 2006 இந்த நாட்களில் வள்ளிபுனத்தில் இருந்த செஞசோலை குழந்தைகள் இல்லம் மீது 16 குண்டுகளை வீசி அந்த இடத்திலேயே 61 பெண் குழந்தைகள் கொல்லப்பட்டனர். 100 இற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து அவையவங்களை இழந்து இன்றும் துன்பத்தோடு வாழ்கின்றனர்.
இவர்களுக்கான நீதி சர்வதேசம் தான் கொடுக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக 20 வருடங்களாக பிரான்சில் தமிழ்ப்பெண்கள் அமைப்பால் பிரெஞ்சு அரசிடமும் நீதியை கேட்டுக்கொண்டே வருகின்றது..


இன்றும் பாரிஸ் சுதந்திர நீதி தேவதையின் சிலைக்கு முன்பாக தமிழ்ப்பெண்கள் அமைப்பால் கவனயீர்ப்புப் போராட்டம் 4.00 மணிமுதல் 6.00 மணிவரை நடாத்தப்பட்டது. உணர்வுள்ள தமிழர்கள், இளையவர்கள் பங்கெடுத்திருந்தனர். வெளிநாட்டு மக்கள், பிரெஞ்சு மக்களும் நின்று அங்கு காட்சிப்படுத்தப்பட்ட காட்சிகளையெல்லாம் பார்த்து நின்றனர்.
பிரான்சு நாட்டில் இன்று வெப்பம் 39 பாகையை தொட்ட போதும் அதற்கும் மத்தியில் குழந்தைகளின் நடனம், தமிழ்
பிரெஞ்சு மொழியான பேச்சுக்களும் கவிதைகளும் இதில் இடம்பெற்றதோடு மூன்று தமிழர்களின் விடுதலைக்காகவும், ஈழத்தமிழ் மக்களுக்காகவும் 2011இல் தனக்குத் தானே தீமூட்டிய வீரப்பெண் தோழர் செங்கொடியின் 15 ஆவது ஆண்டும் இங்கு நினைவு கூரப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here