
கிளிநொச்சி ராப் பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமார் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டமைக்கு கனடாவின் பிரம்டன் நகர மேயர் பெட்ரிக் பிரவுன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கருத்துச் சுதந்திரத்தை மீறும் இந்த கைது நடவடிக்கையை அவர் விமர்சித்ததுடன், சங்கீத்சனை உடனடியாக விடுதலை செய்யவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை முழுமையாக நீக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை, சர்வதேச மன்னிப்புச் சபையும் சங்கீத்சனை உடனடியாக விடுதலை செய்யுமாறும், மனித உரிமைகளுக்கு முரணான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளது


