
தமிழ்ச்சோலைப் பள்ளிகளில் தமிழாசிரியர்களாகப் பணிபுரிய ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. என் தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்ச் சோலை தலைமைப் பணியகம் தெரிவித்துள்ள விவரம் வருமாறு:-
எம் இளம் தலைமுறையினருக்குத் தமிழ்மொழியினைக் கற்றுக் கொடுப்பதில் ஆர்வமுள்ளவர்கள் தகைமைச் சான்றிதழ்களுடன் 15-08-2026 இற்கு முன்னர் விண்ணப்பிக்கலாம்.
தமிழியல் பட்டப்படிப்பினை நிறைவு செய்த இளம் பட்டகர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
விண்ணப்பப் படிவங்களை தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகத்தில் பெற்றுக்கொள்ளலாம். தமிழ்ச்சோலை இணையதளத்திலும் பெற்றுக் கொள்ளமுடியும்.
“நம் வாழ்வும் வளமும் தமிழ்மொழி என்போம்”
எனத் தமிழ்ச் சோலைத் தலைமைப் பணியகம் அறிவித்துள்ளது.



