
பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் தமிழீழ விடுதலைக்காக முதல் தற்கொடைத் தாக்குதல் மேற்கொண்ட கப்டன் மில்லர் வீரகாவியமான (யூலை 05) தமிழீழ தேசத்தின் தடை நீக்கிகள் நாள் 39 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று 05.07.2026 ஞாயிற்றுக்கிழமை புளோமெனில் பகுதியில் பிற்பகல் 15.00 மணிக்கு ஆரம்பமாகி உணர்வெழுச்சியோடு இடம்பெற்றது.
ஆரம்ப நிகழ்வாக பொதுச்சுடரினை இளையோர் அமைப்பு பொறுப்பாளர் செல்வி சுருதி சுதாகரன் அவர்கள் ஏற்றிவைத்தார்.

மாவீரர் பொதுப் படம் மற்றும் தமிழீழ தடை நீக்கி மறவர்களுக்கான ஈகைச் சுடரினை . மாவீரர் குடும்ப உறுப்பினர்கள் ஏற்றிவைத்து மலர்மாலை அணிவித்து மலர் வணக்கம் செலுத்தினர்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும்; அணிவகுத்து சுடர்ஏற்றி மலர் வணக்கம் செலுத்தினர்.
லூவர் தமிழ்ச்சோலை, திரான்சி தமிழ்ச்சோலை , குசானவீல் தமிழ்ச் சோலை மாணவர்களின் தமிழீழ தேசத்தின் தடைநீக்கிகள் நினைவுசுமந்த எழுச்சி நடனம் மற்றும்
தமிழீழ தேசத்தின் தடைநீக்கிகள் நினைவு சுமந்த கவிதை, பேச்சு சிறப்பாக அமைந்திருந்தன.
தமிழர் கலைபண்பாட்டுக்கழகக் கலைஞர்களின் தமிழீழ தேசத்தின் தடைநீக்கிகள் நினைவு சுமந்த எழுச்சிகானங்கள் நிகழ்வை மேலும் உணர்வூட்டிச் சிறப்பித்திருந்தன.

தமிழீழ தேசத்தின் தடைநீக்கிகளை நினைவேந்தி தமிழ்ச்சோலைத் தமிழியல் பட்டக மாணவர்கள் தமது கருத்துரைகளை சிறப்பாக வழங்கியிருந்தனர்.

செவ்ரோன் தமிழ்ச் சோலை 1 மாணவன் அகரன் சர்வசீலன் அவர்களின் உரையும் இடம்பெற்றிருந்தது. .

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் சார்பில் உரையாற்றிய முக்கிய செயற்பாட்டாளர் திரு.அமுதன் அவர்கள் தமிழீழ தேச தடைநீக்கிகளின் தியாகங்களை நினைவுபடுத்தியிருந்ததுடன், இவ்வாறான நிகழ்வுகளில் கலந்துகொள்வது அவசியம் என்பதாக இவருடைய உரை அமைந்திருந்தது.

நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து , தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவடைந்தன.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செய்திப்பிரிவு)


























