
தமிழின அழிப்புக்கு நீதிகோரும் ஈருருளிப் பயணத்தின் 13 ஆவது நாளான இன்று 07.09.2026 திங்கட்கிழமை காலை 8.30 மணிக்கு பிரான்சில் 1 Place de l’Hôtel de ville, 67150 Erstein. பகுதியில் இருந்து அகவணக்கத்தோடு ஆரம்பித்தது. .

சற்றுமுன்னர் 3 Rue du Château, 67230 Benfeld பகுதியைச் சென்றடைந்து அங்கு Benfeld நகரபிதாவிடம் தமிழ்மக்களின் நீதி கோரிய மனு கையளிக்கப்பட்டது. மனுவைப் பெற்றுக்கொண்ட நகரபிதா தனது ஆதரவை மனிதநேய செயற்பாட்டாளர்களிடம் வெளிப்படுத்தியிருந்தார்.

இன்றைய தினம் பிரான்சில் மேலும் பல மாநகர சபைகளில் நீதிகோரும் மனுவைக் கையளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது..


(எரிமலை செய்திப் பிரிவு)


