
முல்லைத்தீவு துணுக்காய் பகுதியில் வீதியோரமாக மிதியுந்தில் சென்று கொண்டிருந்த மாணவன் அதி வேகமாக சென்ற முச்சக்கர வண்டி மோதியதில் சாவடைந்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையில் கடும் காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட குறித்த மாணவன் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளதாகத் தெரியவருகின்றது.

இதனிடையே மாணவன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த நேரத்தில் மாணவனின் பெற்றோருடன் குறித்த முச்சக்கர வண்டி சாரதியின் தரப்பினர் சமரசம் செய்ய முற்பட்டதாகவும் தெரியவருகின்றது. குறித்த ஆட்டோவை ஓட்டிச் சென்ற சாரதி போதையில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


