
செம்மணி மனித புதைகுழியில் அகழ்ந்து எடுக்கப்பட்ட என்புத் தொகுதிகளுக்குரிய காலத்தை கணிப்பிடுவதற்காக காபன் -14 பரிசோதனை முறைமை மேற்கொள்வதற்காக மாதிரிகளை தெரிவுசெய்யும்போது எத்தனை மாதிரிகளை தெரிவுசெய்வது, எப்படி தெரிவு செய்வது, எங்கு பரிசோதனைகளை மேற்கொள்வது என்பது முக்கியமானது எனவும் மாதிரிகளை தெரிவுசெய்யும்போது பங்குபற்றும் நபர்கள் யார் யார் என்பது வெளிப்படையாக தீர்மானிக்கப்பட வேண்டும் என சட்டத்தரணி குமரவடிவேல் குருபரன் தனது சமர்ப்பணத்தினை முன்வைத்தார்.
செம்மணி மனித புதைகுழி தொடர்பான நிர்வாக ரீதியான கலந்துரையாடலானது அகழ்வுப் பணிகளில் ஈடுபடும் நிபுணர்கள் குழுவுக்கும் யாழ் மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தினைச் சேர்ந்த சட்டத்தரணிகளுக்குமிடையில் நேற்றையதினம் இடம்பெற்றபோதே சட்டத்தரணி குமரவடிவேல் குருபரன் தனது சமர்ப்பணத்தினை முன்வைத்தார்.


