இளையோரை நெறிப்படுத்தும் வணங்காமண் மறுவாழ்வுக் கழக கிளித்தட்டு சுற்றுப் போட்டி – 2026

0
4

கலாச்சார, பண்பாட்டு, விழுமியங்களில் உலகிற்கு உதாரணமாக இருந்த ஈழத்தமிழினம் இன்று மது, போதைவஸ்து, சகிக்க முடியாத சமூகச் சீர்கேட்டுச் செயல்கள் நோக்கி இலகுவில் ஈர்ப்படைந்து செல்வதை நாம் அறிந்த வண்ணம் உள்ளோம். திட்டமிட்டு திணிக்கப்பட்ட போர் மூலம் எம் இனம் அழிக்கப்பட்டது 2009 வரை, ஆனால் இன்று பேரினவாதத்தால் எம் இனத்தின் இளைய சமுதாயம் போதை வஸ்துக்கு அடிமையாக்கப்பட்டு இன அழிப்பின் இன்னும் ஓர் அத்தியாயம் மிகக் கச்சிதமாக திரைமறைவில் அரங்கேற்றப்பட்டுக் கொண்டு இருக்கிறது.
கல்விக்கூடங்கள் தொட்டு கடைக் கோடி சந்தி வரை போதை வஸ்திற்கு அடிமையாகாதோர் இல்லை எனும் அளவுக்கு இன்று வியாபித்துள்ளது. இந்நிலை தொடருமாக இருந்தால் இன எதிர்கால சந்ததியின் நிலை? விடை இல்லா பாரிய கேள்விக்குறியோடு நிற்கும்.
எம் இனத்தின் மீதும் இனத்தின் எதிர்காலமாகிய இன்றைய இளையோர் மீதும் அக்கறை கொண்டுள்ள நாம் வழி தவறிச் செல்லும் இளைய சமுதாயத்தை மீட்டு நற்திசை நோக்கி பயணப்பட சிறு முயற்சியாக போட்டிகளை மேற்கொள்ளலாம் என எண்ணியுள்ளோம்.
அதன் பொருட்டு நாம் கிளித்தட்டு சுற்றுப் போட்டிகளை 2023 ஆம் ஆண்டிலிருந்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இருந்து கிளித்தட்டு அணிகளை உருவாக்கி சுற்றுப்போட்டியை நடாத்தி வருகின்றது

எனவே இவ் விளையாட்டிற்கு புத்துணர்ச்சி கொடுத்து 2026 ஆம் ஆண்டிற்கான விளையாட்டு மிகச் சிறப்பாக நடைபெறுவதற்கு ஈழத் தமிழர் துடுப்பெடுத்தாட்ட சம்மேளனம் தமிழர் விளையாட்டுத் துறை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்ஸ் உதவிகளை வழங்கியுள்ளது
முதலாம் இரண்டாம் மூன்றாம் பரிசில்களை வழங்கி வைத்து வணங்காமண் மறுவாழ்வுக் கழகத்தின் 2026 ஆம் ஆண்டிற்கான கிளித்தட்டு சுற்றுப் போட்டிக்கு வலுச் சேர்த்துள்ளதுடன் எதிர்வரும் காலங்களில் பாடசாலைகளில் இந்த கிளித்தட்டு விளையாட்டினை பாடசாலை நிர்வாகம் மற்றும் பொது அமைப்புகள் முன்வந்து செய்வதற்கும் நாம் ஈழத் தமிழர் துடுப்பெடுத்தாட்ட சம்மேளனம் தமிழர் விளையாட்டுத் துறை தமிழர் ஒருங்கிணைப்புக் குழு பிரான்ஸ் அமைப்பினரின் பூரண ஒத்துழைப்பை எதிர்பார்த்து இருக்கின்றோம். என் வணங்காமண் மறுவாழ்வுக் கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                            

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here